மணவாளக்குறிச்சி அருகே கல்படி வருக்கத்தட்டை சேர்ந்தவர் செல்லத்துரை. இவருடைய மகன் விஜயகுமார் (வயது 38). கொத்தனாரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதற்கிடையே விஜயகுமார் கடன் வாங்கி வீடு கட்டினாராம். இதனால் கடந்த சில நாட்களாக கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும், திருமணமாகாத ஏக்கத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக