கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொது மக்கள் தேவையின்றி வாகனங்களில் சென்று வருகின்றனர். அத்தகைய நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர். மேலும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படுகிறது.
அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று 75 வழக்குகள் பதிவு செய்து, 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் நேற்று வரை 37 நாட்களில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 6 ஆயிரத்து 708 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 ஆயிரத்து 282 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக