சனி, 24 அக்டோபர், 2020

கன்னியாகுமரி மாவட்டத்தின் அணைகளின் நீர் மட்டம், நீர் இருப்பு, உள்வரவு மற்றும் வெளியேற்றம் இன்று 24/10/2020

கன்னியாகுமரி மாவட்டத்தின் அணைகளின்  நீர் மட்டம், நீர் இருப்பு, உள்வரவு மற்றும் வெளியேற்றம் இன்று 24/10/2020 காலை நிலவரப்படி,
****************
1)#பேச்சிபாறைஅணையின் உச்ச நீர்மட்டம் ----> 48 அடி, அணையில்தற்போதைய நீர்மட்டம்----> 44..65 அடியாக 
உள்ளது ,

**( 3.89 TMC இருப்பு உள்ளது )**

இன்று காலை நிலவரப்படி அணைக்கு  வினாடிக்கு ---->536 கன அடி தண்ணீர் உள்வரவாக வந்துகொண்டிருந்தது, 
பேச்சிபாறை அணையில் இருந்து வினாடிக்கு 721 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது,
---------------------------
2)#பெருஞ்சாணிஅணையின் உச்ச நீர்மட்டம் ----->77 அடி தற்போது அணையின் நீர்மட்டம்-----> 71.20 அடியாக நீர்மட்டம்  உள்ளது . இன்று காலை நிலவரப்படி அணைக்கு  உள்வரவாக  வினாடிக்கு ----> 232 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.! 

**(2.31 TMC நீர் இருப்பு உள்ளது)

 பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது!
----------------------
3)#சிற்றார்- 1 அணையின் உச்சநீர்  மட்டம் ----> 18 அடி தற்போது அணையில்  நீர் மட்டம் ----> 14.79 அடியாக உள்ளது .

சி்ற்றார் -1 அணைக்கு ‌காலை நிலவரப்படி வினாடிக்கு 7 கன அடி தண்ணீர் உள்வரவாக வந்து கொண்டிருக்கிறது ,

---------------------
4) #சிற்றார் -2 அணையின் உச்ச நீர்மட்டம்----> 18 அடி தற்போது அணையில் நீர்மட்டம்--->14.89 அடியாக உள்ளது.

சிற்றார்-2 அணைக்கு காலை நிலவரப்படி வினாடிக்கு 14 கன அடி தண்ணீர் உள்வரவாக வந்து கொண்டிருந்தது,
--------------------
5) #மாம்பழத்துறையாறு அணையின் உச்ச நீர்மட்டம் -----> 54.12 அடி தற்போது அணையின் நீர் மட்டம்---‌> 53.89  அடியாக உள்ளது , 

------------------
6) #பொய்கைஅணையின் உச்ச நீர்மட்டம் ----> 42.65 அடி , தற்போது அணையின் நீர் மட்டம் ----> 17.20 அடியாக உள்ளது,
------------------
7)  #முக்கடல்அணையின் உச்ச நீர்மட்டம்----> + 25  அடி தற்போது அணையின் நீர் மட்டம்----> 23.70 அடியாக உள்ளது !!

முக்கடல் அணையிலிருந்து  #நாகர்கோவில் மாநகராட்சி குடிநீர் தேவைக்காக  வினாடிக்கு---> 7.42 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது,
---------------
8) #அப்பர்கோதையாறு அணையின் மொத்த நீர்த்தேக்கு திறன்----> 2578.8 மில்லியன் கன அடி (2.58 TMC)
தற்போது அணையில் நீர் இருப்பு ---> 2553.81 மில்லியன் கன அடி

** ( 2.55TMC) இருப்பு உள்ளது

( அணையில் 99 % நீர் இருப்பு உள்ளது)

 , இன்று காலை நிலவரப்படி அப்பர் கோதையார் அணைக்கு வினாடிக்கு 60 கன அடி தண்ணீர் உள்வரவாக அணைக்கு வந்து கொண்டிருந்தது 

இன்று காலை நிலவரப்படி அப்பர் கோதையாறு அணையிலிருந்து அணையின் ஷட்டர் வழியாக  #கோதையாற்றில் வினாடிக்கு --->183 .33 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது!!

---------------------
9) #லோயர்கோதையாறு அணையின் மொத்த நீர்த்தேக்கு  திறன் ---->24.07 மில்லியன் கன அடி, தற்போது அணையில் நீர் இருப்பு 
----->21.90   மில்லியன் கன அடி

( அணையில் 87.6 % நீர் இருப்பு உள்ளது)

இன்று காலை நிலவரப்படி லோயர் கோதையார் அணைக்கு வினாடிக்கு உள் வரவாக 72 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது

இன்று காலை நிலவரப்படி லோயர் கோதையாறு அணையிலிருந்து  #கோதையாற்றில் வினாடிக்கு ---> 265 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.
-----------------
10)#குட்டியார் 
          அணையின் மொத்த நீர்த்தேக்கு திறன்---> 8 மில்லியன் கன அடி தற்போது அணையில் நீர் இருப்பு--- 8 மில்லியன் கன அடி
---------------
11)#சின்னகுட்டியார்
           அணையின் மொத்த நீர்த்தேக்கு திறன்---> 98 மில்லியன் கன அடி தற்போது அணையில் நீர் இருப்பு---- > data not available !
**********
கன்னியாகுமரி மாவட்டத்தின் மிகப்பெரிய அணைகளான , #பேச்சிபாறை, #பெருஞ்சாணி, #அப்பர்கோதையார் ஆகிய அணைகளில் நீர் இருப்பு நன்றாக உள்ளது !

கன்னியாகுமரி மாவட்டத்தின் மலைகளின் சிறப்பு

இந்த பதிவு எதற்கு என்றால் நமது கன்னியாகுமரி மாவட்டத்தின் மலைகளின் சிறப்பு ஆகும் நமது கன்னியாகுமரி மாவட்டத்தின் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டத்தின் முக்கியமான இயற்கை அரண்ராக அதிலும் தென்னிந்திய அளவில் எல்லா காலகட்டத்திலும் நல்ல காலநிலை கொண்ட ஒரே மாவட்டங்கள் #கன்னியாகுமரி மற்றும் #திருவனந்தபுரம் ஆகும் இதற்கு காரணம் வடக்கிலும் & கிழக்கிலும் நமக்கு எல்லை போல உயர்ந்து நிற்கும் கடல் மட்டத்தில் இருந்து மிக உயரமான மேற்கு தொடர்ச்சி மலைகள் ஆகும் , தென்னகத்திலே மேற்கு தொடர்ச்சி மலை முடிவு பெறும் பகுதியில்  கடல் மட்டத்தில் இருந்து மிக உயரமான பகுதியை 6300 அடி கன்னியாகுமரி மாவட்டத்தின் அச்சன்காடு ( மாறாமலை மேல் பகுதி)  வருகிறது,  கோடையில் மழை காலத்தில்  கூட கன்னியாகுமரி மாவட்ட மலை பகுதியில் உருவாகும் மேகங்கள்  தான் திருவனந்தபுரம் மாவட்டத்தின் பல இடங்களுக்கு சிறப்பாக மழையை அளிக்கிறது , அதுபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடையில் கூட இதமான தட்பவெப்ப நிலை , நிலையான கோடை வெப்பம் நிலவ கன்னியாகுமரி திருவனந்தபுரம் மாவட்டங்களை வடக்கிலும் கிழக்கிலும் சூழ்ந்து நிற்கும் இந்த உயரமான மலைகளும் அதன் அடர்ந்த காடுகளும் தான் நமக்கு காரணம் . map படம் -1 யை பார்க்கவும் மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு சரிவு மிகவும் பசுமை மிக்கது காரணம் நம் அரபிக்கடலின் ஈரம் மிகுந்த காற்றை தடுத்து மேகங்களை குவிப்பதால் நமக்கு கன்னியாகுமரி ஆரம்பித்து அனைத்து பகுதிகளிலும் சீரான மழை பரவல் கிடைக்கிறது இதனால் தான் பசுமை மிகுந்த மரங்கள் நீர்நிலைகள், மேற்கு நோக்கி பாய்ந்து நம் அரபிக்கடல் பகுதியில் கலக்கும் எண்ணற்ற ஆறுகள் பசுமையான பசுமை மாறாத புல்வெளி பரப்புகளை  காண முடியும் , கோடைகாலத்தில் , வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிகமாக பெரும்பாலான நாள்கள் நம்மை சுற்றி வடக்கிலும் கிழக்கிலும் உயர்ந்து நிற்கும் இந்த மலை பகுதிகளில் உருவாகும் இடி மேகங்களால் தான் கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோர பகுதிகள் வரை மழையை கொடுக்கிறது , அதுபோல மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் ஆறுகள் நம் அரபிக்கடல் பகுதியில் கலப்பதால் தான் கன்னியாகுமரி , கேரளா கடலோர பகுதிகள் எல்லா காலகட்டத்திலும் மீன்வளம் மிக்க பகுதியாக பசுமையாக கடலோர பகுதிகளாக உள்ளது ,  கடலின் தட்பவெப்ப சூழல் மீன்வளத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும் நமது மீனவர்களுக்கு  கூட உதவுவது இந்த மலைகளின் பங்களிப்பு தான் காரணம் ‌மேற்கு தொடர்ச்சி மலையின் பல ஆறுகள் நம் கன்னியாகுமரி ,கேரளா கடலோர பகுதிகளில் ஆண்டு முழுவதும் தண்ணீரை கொண்டு சேர்ப்பதால் தான் கேரளா, கர்நாடக, கன்னியாகுமரி கடலோர பகுதிகள் எல்லா காலகட்டத்திலும் மீன்வளம் மிக்கது  , 

பாலக்காடு இடைவெளி 29 km நீளம் கொண்டது அதனால் தான் கோவை , திருப்பூர் மாவட்டங்களின் வெப்ப அலை நேரடியாக வடக்கு  கேரளாவை பிப்பிரவரி மாதம் இறுதி முதல் மார்ச் வரை தாக்குகிறது அதனால் தான் வடக்கு கேரளாவில் கூட இந்த காலக்கட்டத்தில் பல நாள்கள் பல இடங்களில் 40°C வரை வெப்பநிலை காணப்படும் அதே போல தான் தெற்கு கேரளாவில் கொல்லம் மாவட்டத்தின் புனலூர் பகுதியில் 40°C வெப்பநிலை செங்கோட்டை இடைவெளி வழியாக கிடைக்கும் வறண்ட வெப்ப காற்றால் பிப்பரவரி இறுதி முதல் மார்ச் பகுதி வரை கிடைக்கிறது ஆனால் மேற்கு தொடர்ச்சி மலையில் நம் ஆரல்வாய்மொழி இடைவெளி வெறும் -3 km மட்டுமே இடைவெளி கொண்டது இந்த 3km இடையில் கூட ஒரு மலை 1500 அடி உயரத்தில் ஆரல்வாய்மொழி பகுதியில் நிற்கிறது இதனால் வடகிழக்கு திசையில் இருந்து மிகவும் குறைவாகவே வெப்பத்தை வடகிழக்கு திசையில் இருந்து கொண்டு வருகிறது இதனால் தான் நமக்கு கன்னியாகுமரி ,திருவனந்தபுரம் ‌மாவட்டத்தில் பிப்பிரவரி இறுதி முதல் மார்ச் பகுதி வரை கோடை வெப்பம் நிலையாக சீராக இருக்க காரணம் , நமது மாவட்டத்தை சூழ்ந்து நிற்கும் இந்த கடல் மட்டத்தில் இருந்து உயரமான மலைகளும் அடர்ந்த காடுகளும் தான் கோடையில் கூட நமக்கு வடகிழக்கு திசையில் இருந்து வரும் வறண்ட வெப்ப காற்றை தடுத்து அதன் வெப்பத்தை குறைத்து நமக்கு தருகிறது , உதாரணமாக நமது மாவட்டத்தில் இருந்து பேருந்தில் போகும் போது பலரும் கோடை காலத்தில் உணர்ந்து இருப்போம் நமது மாவட்டம் ஆரல்வாய்மொழி தாண்டியவுடன் ஒரு சூடான காற்று வீசும் அதே போல மீண்டும் நமது மாவட்டத்திற்குள் வரும் போது ஆரல்வாய்மொழி கடந்து நமது மாவட்டத்திற்குள் வந்த உடன் இதமான சூழல் காணப்படுவதும் இந்த இயற்கை கட்டமைப்பு கடல் மட்டத்தில் இருந்து மிக உயர்ந்த நமது மலைகள் தான் இதனால் தான் கன்னியாகுமரி மாவட்டம் , கேரளா எல்லாம் கடும் கோடை காலத்தில் கூட 40, 45°C தொடர் வெப்பம் அனல் காற்றை சந்தித்த வரலாறே கிடையாது , அதுபோல கோடையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் , கடுமையான காட்டு தீ போன்ற பாதிப்பு எதுவும் கிடையாது , எல்லா காலகத்திலும் ஈரப்பத்தை 75% முதல் 100% வரை தக்கவைத்து கொள்வதற்கு நமது இந்த இயற்கை அரண் அமைப்பு மிக முக்கியமான ஒன்றாகும் தமிழகத்தில் நீலகிரி ‌மாவட்டத்திற்கு அடுத்தபடியாக அதிக 32.5% காடுகளையும் ‌,நீலகிரி மாவட்டத்திற்கு அடுத்தபடியாக அதிக மழை பொழிவு மற்றும், அதிக அணைகளையும் கன்னியாகுமரி மாவட்டம் மலை தொடர்கள் பெறுகிறது , நமது மாவட்டத்தில் மட்டும் 11 அணைகள் உள்ளது , 30 மேற்பட்ட அருவிகள் உள்ளது , இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து மலைகளையும் காடுகளையும் ‌மிகவும் பாதுகாப்பது அவசியம் ஆகும் , இன்னொரு விஷயம் நமது மாவட்டம் முழுவதும் மரங்களையும் தற்போது இருப்பதை போல போணி காக்க வேண்டும் , 

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

மத்திய அரசு திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் மீனவர்களுக்கு 700 வீடுகள்- கலெக்டர் தகவல்

மத்திய அரசு திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் மீனவர்களுக்கு 700 வீடுகள்- கலெக்டர் தகவல்

குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது முழு நேர மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு மற்றும் கடல் மீனவர் அல்லது மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்கள் சார்ந்த மீனவர்களுக்கு மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின் இந்திரா குடியிருப்பு திட்ட வழிமுறைகளின் அடிப்படையில் 5 ஆயிரம் வீடுகளை மொத்தம் ரூ.85 கோடியில் கட்ட தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் 2020-2021-ம் ஆண்டுக்கு 700 வீடுகள் கட்டி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும், முழு நேர மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள் நாகர்கோவிலில் உள்ள மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும். மீனவர் பெயரில் வேறு எங்கும் கான்கிரீட் அல்லது நிரந்தர வீடுகள் இல்லாத, தங்களது பெயரில் நிலத்திற்கான பட்டா உள்ள மற்றும் அரசின் வேறு எந்த வீட்டு வசதி திட்டத்திலும் பயனடைந்திராத மீனவராக இருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வியாழன், 3 செப்டம்பர், 2020

நாளைய மின்தடை அறிவிப்பு

நாளைய மின்தடை பற்றிய அறிவிப்பு:

இரணியல் மின்வாரிய உதவி பொறியாளர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : 



பரசேரி மின் விநியோக பிரிவு அலுவலக பராமரிப்பு பகுதிக்கு உட்பட்ட உயரழுத்த மின்பாதையில் ரயில்வே கிராசிங்கில் புதிதாக புதைவடம் இயக்கத்திற்கு கொண்டு வரும் பணியும் , பராமரிப்பு பணியும் நாளை ( 4 ம் தேதி ) நடக்கிறது . இத னால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குதிரை பந்திவிளை , வடக்கு நுள்ளிவிளை , மணக்கா விளை , ஐந்துபுளிமுட்டு கிராமம் , நுள்ளிவிளை ஆர்.சி சர்ச் சமீபம் , துவரவிளை , ஐக்கியபுரம் , வீராணி , வர்த்த நாயன்குடி , ஆளூர் , கலந்தர்நகர் , பள்ளி தெரு , ஸ்ரீகிருஷ்ணபுரம் , செக்காரவிளை , ஆதி காங்கேயன்விளை , காட்டுவிளை ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது . இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

----------------------------------------------------------------
தொடர்ந்து இணைந்திருங்கள் குளச்சல் டுடே - வுடன் ....


#Powercut #Kanniyakumari 

புதன், 26 ஆகஸ்ட், 2020

இரண்டாம் நாளாக தொடர் உண்ணவிரதப் போராட்டம் நடத்திய இரையுமன்துறை மீனவர்கள்...

இரண்டாம் நாளாக தொடர் உண்ணவிரதப் போராட்டம் நடத்திய இரையுமன்துறை மீனவர்கள்...

தேங்காய்பட்டணம் மீன்பிடி ஹார்பாருக்கு செல்ல தாமிரபரணி ஆற்றின் கரையோரம் புதிதாக ரோடு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி   இரையுமன்துறை  மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவ பொதுமக்கள் இரையுமன்துறை தேவலாயம் முன்பு கூடாரம் அமைத்து நேற்று முன் தினம் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளனர் 


உண்ணாவிரதத்த போரட்டத்துக்கு அனுமதி கொடுக்கபடாத நிலையில் ஆண்கள் , பெண்கள் என்று பல பேர் கலந்து கொண்டனர் . தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் இரண்டாம் கட்டமாக பேச்சுவார்த்தைகள் நடத்தினர் . இதில் முடிவுகள்  ஏற்படாததால் இரவிலும் தொடர்ந்து போராட்டம் நடந்தது . 


2 வது கட்ட பேச்சுவார்த்தையிலும் தீர்வு எட்டப்படாததால் , நேற்று 2 வது நாளாக போராட்டம் தொடர்ந்தது . நேற்றும் ஏராளமான ஆண்களும் , பெண்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர் . போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் . 



இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விஜயன் ( 48) , லீலஸ் ( 47 ) , பிறடி ( 54 ) ஆகிய மூன்று பேர் நேற்று மதியம் மயக்கமடைந்தனர் . 


அவர்களுக்கு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சையும் கொடுக்கப்பட்டது . 


#Thengapattanam #kanniyakumari 

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

25 ஆம் தேதி மின் தடை பற்றிய அறிவிப்பு

மின்தடை நாகர்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் ராஜசேகர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : 
மீனாட்சிபுரம் , தெங்கம்புதூர் , கன்னியாகுமரி ஆகிய துணை மின்நிலையங்களில் வருகிற 25 ம் தேதி பராமரிப்பு பணி நடக்கிறது . 

இதனால் வடிவீஸ்வரம் , கோட்டார் , கணேசபுரம் , இடலாக்குடி , ஒழுகினசேரி , தளியபுரம் , ராஜபாதை , கரியமாணிக்கபுரம் , செட்டிக்குளம் சந்திப்பு , சரலூர் , ராமன் புதூர் சந்திப்பு , இந்துக்கல்லூரி , வேதநகர் , தெங்கம்புதூர் , பறக்கை , ஐஎஸ் இடி , மேலமணக்குடி , முகிலன்விளை , மணிக்கட்டிப்பொட்டல் , ஒசரவிளை , காட்டுவிளை , புதூர் , ஈத்தாமொழி , தர்மபுரம் , பழவிளை , பொட்டல் , வெள்ளாளன்விளை , மேலகிருஷ்ணன்புதூர் , பள்ளம் , பிள்ளையார்புரம் , புத்தளம் , புத்தன்துறை , கன்னியாகுமரி , கோவளம் , ராஜாவூர் , மைலாடி , வழுக்கம்பாறை , கீழ மணக்குடி , அழகப்பபுரம் , சுசீந்திரம் , கொட்டாரம் , சாமித்தோப்பு , அஞ்சுகிராமம் , கோழிக்கோட்டுப்பொத்தை , வாரியூர் ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது .

#Kanniyakumari #Powercut #Colacheltoday 

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

மின் தடை அறிவிப்பு

தக்கலை மின்வாரிய செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : 

சேரமங்கலம் , செம்பொன்விளை , முட்டம் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை ( 4 ம் தேதி ) நடக்கிறது . 
நாளை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சேரமங்கலம் , அழகன்பாறை , கருமண்கூடல் , மண்டைக்காடு , லெட்சுமிபுரம் , நடுவூர்கரை , ஐ.ஆர்இ , பரப்பற்று , கூட்டு மங்கலம் , புதூர் , மணவாளக்குறிச்சி , பிள்ளையார்கோவில் , கடியப்பட்டணம் , அம்மாண்டிவிளை , வெள்ளமோடி , வெள்ளிச்சந்தை , முட்டம் , சக்கப்பத்து , ஆற்றின்கரை , சாத்தன் விளை , ஆலன் விளை , திருநைனார்குறிச்சி , குருந்தன்கோடு , கட்டிமாங்கோடு , செம்பொன்விளை , திக்கணங்கோடு , தெங்கன்குழி , மத்திகோடு , சாஸ்தான்கரை , சேனம்விளை , கொட்டில்பாடு , சைமன்காலனி , கீழக்கரை , குளச்சல் , மிடாலக்காடு , பிடாகை , கோடிமுனை , ஆலஞ்சி , குறும்பனை , வாணியக்குடி , பத்தறை , குப்பியன்தறை , பாலப்பள்ளம் , திங்கள்நகர் , இரணியல் , கண்டன்விளை , நெய்யூர் , பட்டரிவிளை , தலக்குளம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது .....

ஞாயிறு, 26 ஜூலை, 2020

நாகர்கோவில், கருங்கல் பகுதிகளில் 28 இல் மின்தடை



நாகர்கோவில் பகுதியில் 28 இல் மின்தடை 

நாகர்கோவில் நகரப் பகுதியில் செவ்வாய்க் கிழமை ( ஜூலை 28 ) மின்தடை செய்யப்படுகிறது . இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : 

நாகர்கோவில் துணை மின்நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை ( ஜூலை 28 ) நடைபெற உள்ளதால் , அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் வல்லன்குமாரன்விளை , தடிக்காரன்கோணம் , வடசேரி , ஆசாரிப்பள்ளம் துணை மின் நிலைய பகுதிகளிலும் , அதைச் சார்ந்துள்ள நாகர்கோவில் நகர்ப்பகுதி , பெருவிளை , சுங்கான்கடை வடசேரி கிருஷ்ணன் கோவில் , எஸ்.எம்.ரோடு , கல்லூரிச் சாலை , நீதிமன்றச் சாலை , கே.பி.ரோடு , பால்பண்ணை , நேசமணிநகர் , தோப்பூர் , வேம்பனூர் , அனந்தன்நகர் , பார்வதிபுரம் , புத்தேரி , இறச்சகுளம் ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது ....
_________________________________________



குழித்துறை கோட்டத்திற்குட்பட்ட கருங்கல் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள்  (செவ்வாய்க்கிழமை ) நடக்கிறது . எனவே , அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கருங்கல் , பாலூர் , திப்பிறமலை , பூட்டேற்றி , கொட்டேற்றிகடை , தெருவுகடை , செந்தறை , மேல்மிடாலம் , மிடாலம் , நட்டாலம் , எட்டணி , இடவிளாகம் , பள்ளியாடி , பாரக்கடை , குழிக்கோடு , முருங்கவிளை , செல்லங்கோணம் , முள்ளங்கினாவிளை , கஞ்சிக்குழி , கருமாவிளை , படிவிளை , மானான்விளை , பெருமாங்குழி , ஓளிப்பாறை , மீறி , கல்லடை , ஹெலன்காலனி மற்றும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது . இந்த தகவலை குழித்துறை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார் .....


#ColachelToday
#Kanyakumari
#Powercut

சனி, 25 ஜூலை, 2020

குழித்துறை நகராட்சியில் முழு ஊராடங்கை அம்ல்படுத்த திமுக கோரிக்கை

குழித்துறை நகராட்சியில் முழு ஊராடங்கை அமல்படுத்த திமுக கோரிக்கை


குமரி மேற்கு மாவட்ட தி.மு.க அவைத் தலைவர் எம்.எஸ் பப்புசன் விடுத் துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது : குழித்துறை நகராட்சி நாகர்கோவிலுக்கு அடுத்தபடியாக மிக பெரிய வணிக பகுதியாகும் . மிக பெரிய காய்கறி சந்தை , மீன் ஏல சந்தை , மிகப் பெரிய மால்கள் , வணிக நிறுவனங்கள் உள்ளடக்கிய பகுதியாகும் . தினமும் ஆயிரக்கணக்கானோர் பல்வேறு காரணங்களுக்காக இங்கு வந்து செல்கின்றனர் . 
கடந்த இரண்டு வார கால மாக குழித்துறை நகராட்சி பகுதியில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறி வேகமாக பரவவருகிறது . பொது மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எடுக்க முடியாமல் வறுமையில் உள்ளனர் . மாவட்ட நிர்வாகம் போர் கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து குழித்துறை அரசு மருத்துவமனையில் கொரோன பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் . குழித்துறை நகராட்சி பகுதில் சங்கிலி தொடர்பு தொற்று வேகமாக பரவுவதை தடுப்பதற்கு குழித்துறை நகராட்சி பகுதியில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் . இவ்வாறு அதில் கூறப்படுள்ளது 

#குழித்துறை #குமரி

செவ்வாய், 14 ஜூலை, 2020

மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் , நாகர்கோவில் பத்திரிக்கை செய்தி



14.07.2020 

✷காய்ச்சல் , இருமல் , சளி , மூச்சு விடுவதலில் சிரமம் போன்ற அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று காணப்பட்டாலும் பொதுமக்கள் தங்களை தாங்களே வீட்டில் தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும் . வெளியில் நடமாடுவதைத் தவிர்த்து அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் . கொரோனா நோய் பரவலை தடுக்க , பொதுமக்கள் தங்களின் ஒத்துழைப்பினை வழங்கி நோய் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறது . 

✷கொரோனா பரவல் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் கருதி 01.07.2020 அன்று முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடைகள் அனைத்தும் ( ஹோட்டல்களும் மருந்து கடைகளும் தவிர்த்து ) காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டது . தொடர்ந்து அவ்வாறே அனைத்து கடைகளும் மாலை 5 மணி வரை செயல்படும் . பொதுமக்களும் , வணிக பெருமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது . • 

✷ கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவிட் கவனிப்பு மையங்களில் ( Covid Care Centre ) நோய்த்தொற்று பாதித்தவர்களுக்கு உணவுப்பொருட்களுடன் மருத்துவ சிகிச்சையும் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வருகின்றன . 

✷முககவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடிய 60 பேருக்கு இன்று அபராதமாக ரூபாய் 6000 வசூலிக்கப்பட்டது . 

✷ கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் , களபணியாளர்கள் மூலமாகவும் , சோதனைச்சாவடிகள் மூலமாகவும் 62059 நபர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் . .

✷தற்போது கன்னியாகுமரி மாவட்டம் , ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 572 பேர் சிகிச்சையில் உள்ளனர் . • 

✷ கொரோனா நோய்த்தோற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மொத்தம் 721 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் . -

✷ கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மொத்தம் 4437 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் . மேலும் வெளியூரிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த பயணிகளில் 4942 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் . 

✷  ஊரடங்கு உத்தாவை மீறிய வகையில் மொத்தத்தில் இதுவரை 8524 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன . மேலும் ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் 6341 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன ...

#Colacheltoday
#Kanniyakumari
#Kanyakumari
#Nagercoil

வியாழன், 9 ஜூலை, 2020

குமரி மாவட்ட ஆட்சியர் அவர்களின் செய்தி :



ஈரானிலிருந்து வந்த 535 நபர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 தனிமைபடுத்தும் மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். 7 நாட்கள் தனிமைபடுத்தல் முடிந்து அரசு பேருந்து மூல அவரவர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 5 நபர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து களியக்காவிளை சோதனை சாவடி வழியாக வருகின்ற பிறமாவட்டங்களை சேர்ந்த நபர்கள் அரசு பேருந்து மூலம் அந்தந்த
மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். 

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மற்றும் அவர்களது சந்திப்பின் மூலம் கண்டறியப்பட்ட நபர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்க அரசு அலுவலர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு தகவல்கள் தினசரி சேகரிக்கப்பட்டு வருகின்றன. 

தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து குணமாகி வீட்டு தனிமையில் இருப்பவர்கள் உடல் நலம் குறித்து விபரங்கள் சேகரிக்க தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முகக்கவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடிய 172 பேருக்கு இன்று அபராதமாக ரூபாய் 17200 வசூலிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், களபணியாளர்கள் மூலமாகவும், சோதனைச்சாவடிகள் மூலமாகவும் 55692 நபர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

 தற்போது கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பேர் 439 சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மொத்தம் 453 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மொத்தம் 2954 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெளியூரிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த பயணிகளில் 5231 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்

ஊரடங்கு உத்தரவை மீறி தலையில் மொத்தத்தில் இதுவரை 8507 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் 6328 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

#colacheltoday
#kanniyakumari
#kanyakumari

வெள்ளி, 3 ஜூலை, 2020

அரசின் அறிவுறுத்தலை கடைபிடிக்காமல் கடை அமைத்து வியாபாரம்.....

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இயங்கிவந்த தற்காலிக சந்தையில் வியாபாரிகளுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு பணியில் இருந்த அனைத்து வியாபாரிகளுக்கும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.....

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வியாபாரிகள் தங்களது வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் படி அறிவுறுத்திய பிறகும்
வடசேரி சந்திப்பில்  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வியாபாரிகள் அரசின் அறிவுறுத்தலை கடைபிடிக்காமல் கடை அமைத்து வியாபாரம் செய்ததால் ஆணையர் திருமதி. ஆஷா அஜித் IAS அவர்களின் உத்தரவின் பேரில் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் கிங்சால் அவர்கள் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் கடைகளை அப்புறப்படுத்தினர்...

மேலும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வியாபாரிகள் வீட்டில் தனிமையில் இல்லாமல் வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் எச்சரித்துள்ளார்......

செவ்வாய், 30 ஜூன், 2020

மாவட்ட ஆட்சித்தலைவரின் இன்றைய செய்திக்குறிப்பு


☞  05.07.2020 , 12.07.2020 , 19.07.2020 மற்றும் 26.07.2020 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் அரசு அறிவிப்பின்படி முழு ஊரடங்கு எந்தவிதமான தளர்வுகளும் இன்றி கன்னியாகுமரி மாவட்டத்தில் அமல் படுத்தப்படும் .

☞ அரசு அறிவிப்பின்படி கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து 01.07.2020 முதல் 15.07.2020 வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது .

☞   கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் , ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளும் , தளர்வுகளும் 31.07.2020 நள்ளிரவு 12 மணி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் நீட்டிப்பு செய்யப்படுகிறது .

☞ மாவட்டத்திற்குள் இ - பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்படும் .

☞ வெளிமாநிலங்களுக்கு சென்று வரவும் , வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குள் வரவும் , மாவட்டங்களுக்கிடையே சென்று வரவும் , இ - பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் .

☞ கொரோனா பரவல் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது , அதன்படி நாளை ( 01.07.2020 ) முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் . பொதுமக்களும் , வணிக பெருமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .

☞ கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கூடுதல் எண்ணிக்கையில் வரும் நபர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கும் பொருட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை அருகில் ஆறு இடங்களில் கோவிட் பராமரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன .

☞ கொரோனா பரிசோதனைக்காக மருத்துவப்பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் பகுதிகளுக்கு வரும்போது பொதுமக்கள் அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது .

☞ பரிசோதனையை தவிர்க்கும் விதத்தில் பொதுமக்கள் செயல்பட்டால் உண்மையாக மறுக்கப்பட்டவர்கள் விபரம் தெரியாத நேர்வுகளில் , கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது சிரமங்களை ஏற்படுத்தும் என்பதை மனதில் கொண்டு பொது மக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது . -

☞ முககவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடிய 225 பேருக்கு இன்று அபராதமாக ரூபாய் 22500 வசூலிக்கப்பட்டது .

☞ கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் , களபணியாளர்கள் மூலமாகவும் , சோதனைச்சாவடிகள் மூலமாகவும் 44866 நபர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

☞தற்போது கன்னியாகுமரி மாவட்டம் , ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 225 பேர் சிகிச்சையில் உள்ளனர் .

☞ கொரோனா நோய்த்தோற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மொத்தம் 206 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் . 

☞ கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மொத்தம் 1797 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் . மேலும் வெளியூரிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த பயணிகளில் 6816 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் .

☞  ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் மொத்தத்தில் இதுவரை 8480 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன . மேலும் வாரடங்கு உத்தரவை மீறிய வகையில் 6318 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன .

- மாவட்ட ஆட்சித்தலைவர் , கன்னியாகுமரிமாவட்டம் .

#Colacheltoday

வெள்ளி, 19 ஜூன், 2020

மாவட்ட ஆட்சியரின் செய்திக்குறிப்பு 19.6.20

சென்னையிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் வரும் நபர்கள் சென்னை முதல் கேரளா வரை இ - பாஸ் ஒப்புதல் பெற்று வருகின்றார் . இவர்கள் கேரளா செல்வதாக கருதி சோதனைச் சாவடியில் சளி பரிசோதனை மேற்கொள்ளப்படாமல் தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர் . ஆனால் உண்மையில் இவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் . இதனால் நோய்த் தொற்று இருக்கும் சூழ்நிலையில் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட காரணமாகி விடுகின்றனர் . சரியான இருப்பிட ஆவணங்கள் அடிப்படையில் இ - பாஸ் பெற்று வருமாறு பொது மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது . ஏற்கனவே தொடர்ந்து வலியுறுத்துவது போல் சென்னை உள்ளிட்ட வெளியிடங்களிலிருந்து வருபவர்கள் தங்கள் பகுதிக்கு வந்திருப்பதாக பொதுமக்கள் அறிந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி எண் 1077 - ல் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளாப்படுகிறது . தகவல் தெரிவிப்பவர்கள் குறித்து விபரம் வெளியிடப்படமாட்டாது . - 

சென்னையிலிருந்து இ - பாஸ் இல்லாமல் அஞ்சுகிராமம் வரை வந்து பின்னர் உள்ளூர் ஆட்டோவில் மாவட்டத்திற்குள் நுழைய முயன்ற நான்கு பேர் கண்டறியப்பட்டனர் . ஆட்டோ ஓட்டி வந்த லெவிஞ்சிபுரம் சாலைப்பதூர் கணேசன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரது ஆட்டோ பாணர் TN74 P 0183 பறிமுதல் செய்யப்பட்டது . . 

முக கவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடிய 278 பேருக்கு இன்று அபராதமாக ரூபாய் 27800 வசூலிக்கப்பட்டது . 

 கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் , களபணியாளர்கள் மூலமாகவும் , சோதனைச்சாவடிகள் மூலமாகவும் 33580 நபர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் . . 

தற்போது கன்னியாகுமரி மாவட்டம் , ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 76 பேர் சிகிச்சையில் உள்ளனர் , 

கொரோனா நோய்த்தோற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை பொத்தம் 110 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் 

 கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மொத்தம் 725 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் . மேலும் வெளியூரிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த பயணிகளில் 9118 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்....

ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் மொத்தத்தில் இதுவரை 8404 வழக்குகளும் , 6254 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

ஞாயிறு, 14 ஜூன், 2020

குளச்சல் காவல்துறையின் முக்கிய அறிவிப்பு...

குமரி மாவட்டம்..

குளச்சல் நகர பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு பதிவு.... 

குளச்சல் காவல்துறையின் முக்கிய அறிவிப்பு...

குளச்சல் ,சைமன்காலணி,கோடிமுனை ,வாணியகுடி ,குறும்பனை ,கொட்டில்பாடு  ஆகிய‌ பகுதி மீனவ கிரமாங்களில் வாழும் மக்களுக்கு  எச்சரிக்கை பதிவு தயவு செய்து அரசும் அரசு அதிகாரிகளும் , காவல்துறை அதிகாரிகளும் அறிவுறுத்துவதை தயவு செய்து கேட்க உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் மிகவும் மிதவும் கொடியை நோயான கொரோனா வைரஸ் பாதிப்பு நாட்களுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது ஆகையால் பொதுமக்கள் ஆகிய‌ நாம் தான்  சமூக இடைவெளியை கடைபிடித்தும் , வெளியில் வரும் பொதும் முககவசம் அணிந்தும் நடக்க வேண்டும்‌ என்பதை நினைவில் கொள்ளுங்கள் மக்களே.....

தனித்திருப்போம்‌..
தேசத்தை காப்போம்....

வெள்ளி, 29 மே, 2020

குமரி மாவட்டசெய்தி துளிகள் சில


✓அஞ்சுகிராமத்தில் கட்டப்பட்டுள்ள
ரூ.36¼ கோடியில் 480 வீடுகளுடன் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்
காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

✓குமரியில் +2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்காக நேற்று 29 சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்பட்டன. 1,276 ஆசிரிய, ஆசிரியைகள் பணியில் ஈடுபட்டனர்.

✓குமரியில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கடந்த 65 நாட்களில் 7 ஆயிரத்து 955 வழக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

✓புதுக்கடை அருகே உள்ள அரசகுளம் பகுதியில் விஷம் குடித்த இளம்பெண் நேற்று உயிரிழந்தார் .

வியாழன், 21 மே, 2020

இருதரப்பினர் மோதல்; 8 பேர் மீது வழக்கு

இருதரப்பினர் மோதல்; 8 பேர் மீது வழக்கு


தாழக்குடி மேலகாலனி கல்வெட்டான் குழியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 50). இவருடைய மனைவி தாசம்மாள் (44). சம்பவத்தன்று தாசம்மாள் அவருடைய வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் (42) என்பவர் தாசம்மாளை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாசம்மாள், பாஸ்கரனின் தந்தை கிறிஸ்துதாஸிடம் கூறியுள்ளார். இதனையடுத்து இருவருக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. பின்னர் தாசம்மாள் தரப்பினரும், கிறிஸ்துதாஸ் தரப்பினரும் மோதிக்கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து தாசம்மாள் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கிறிஸ்துதாஸ், அவருடைய மனைவி மார்த்தாள், மகன்கள் பாஸ்கர், சங்கர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோல கிறிஸ்துதாஸ் கொடுத்த புகாரின் பேரில் ராமச்சந்திரன், அவருடைய மனைவி தாசம்மாள், மகன்கள் சாருஹாசன், சுனில் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திங்கள், 18 மே, 2020

தனியார் பள்ளி பெண் ஊழியர் தீக்குளித்து தற்கொலை



குலசேகரம் அருகே நாகக்கோடு அம்பலத்துவிளையை சேர்ந்தவர் டென்னிஸ் (வயது 30), தொழிலாளி. இவருடைய மனைவி ஐஸ்வர்யா (27), ஒரு தனியார் பள்ளியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உண்டு. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ஐஸ்வர்யா தன்மீது மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஐஸ்வர்யா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிறிஸ்தவ ஆலயத்தில் திருட்டு



திருவட்டார் அருகே செறுகோல் குற்றிமாவிளையில் சி.எஸ்.ஐ. ஆலயம் உள்ளது. நேற்று காலையில் ஆலயத்தை சுத்தம் செய்வதற்காக சபை பணியாளர் ராபின் சென்றார். அப்போது, கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் ஆலய நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து பார்த்த போது, ஆலயத்தின் பின்பக்கத்தில் உள்ள அறையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது. ஆலயத்தில் இருந்த ஒலிபெருக்கி சாதனங்கள் போன்ற மின்சார பொருட்கள் திருடப்பட்டிருந்தன. மூடை கட்டி வைக்கப்பட்டிருந்த அந்த பொருட்களை மர்ம நபர்கள் ஆலயத்திற்குள் புகுந்து திருடி சென்றுள்ளனர். மேலும், சில பொருட்களை மூடை கட்டி விட்டு கொண்டு செல்ல முடியாததால் அப்படியே வைத்துவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து சபை செயலாளர் சிம்சோன் கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



ஞாயிறு, 17 மே, 2020

குளச்சலில் மழை:கட்டுமர மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை



குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் குளச்சல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் காமராஜர் சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் சேதமடைந்தது. இதனால் அந்த பகுதி இரவு முழுவதும் இருளில் மூழ்கியது. மழை காரணமாக சாஸ்தான்கரையில் ஒரு வீட்டின் காம்பவுண்டு சுவர் இடிந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த வழியாக கார், டெம்போ போன்ற வாகனங்களில் சென்றவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கட்டுமரங்கள் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று மழை, காற்று காரணமாக கட்டுமர மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் கட்டுமரங்கள் மேடான பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன.



வெள்ளி, 15 மே, 2020

விபத்தில் 2 பேர் காயம்



இரணியல் அருகே நெய்யூர் இரணியல்கோணம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 34). இவர் மோட்டார் சைக்கிளில் மேக்கா மண்டபத்தில் இருந்து அழகியமண்டபம் நோக்கி புறப்பட்டார்.

பின்னால் அவர் நண்பர் ரவீந்திரன் உட்கார்ந்து இருந்தார். பிலாங்காலை பகுதியில் மோட்டார் சைக்கிள் செல்லும் போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கண்ணன், ரவீந்திரன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தக்கலை மணலி பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




வியாழன், 14 மே, 2020

மார்த்தாண்டம் சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது



மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் ரெஜி (வயது 38), தொழிலாளி. இவர், 4 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதார். அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெஜியை தேடி வந்தனர். இந்தநிலையில், சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான தனிப்படை போலீசார் ரெஜியை கைது செய்தனர்.

செவ்வாய், 12 மே, 2020

குமரி மாவட்டத்தில் நடைபெறும்கொரோனா தடுப்பு பணிகளுக்கு முஸ்லிம் ஜமாஅத் பாராட்டு





குமரி மாவட்ட முஸ்லிம் ஜமா அத் கூட்டமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு குமரி மாவட்ட முஸ்லிம் ஜமா அத் கூட்டமைப்பு சார்பில் நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். குறிப்பாக குமரி மாவட்டத்தில் கொரோனா பரவாமல் தடுக்க அனைத்து துறைகளையும் முடுக்கிவிட்டு தடுப்பு பணிகளை செய்து வரும் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவுக்கும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்துக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். கொரோனா வைரசுடன் போராடி வரும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவம் சார்ந்த அனைத்து பணியாளர்களுக்கும், வைரஸ் மக்களை தாக்காமல் இருக்க உழைக்கும் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் போலீசாருக்கு ஜமா அத் கூட்டமைப்பு சார்பில் நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




திங்கள், 11 மே, 2020

திருமணமாகாத ஏக்கத்தில் கொத்தனார் தற்கொலை



மணவாளக்குறிச்சி அருகே கல்படி வருக்கத்தட்டை சேர்ந்தவர் செல்லத்துரை. இவருடைய மகன் விஜயகுமார் (வயது 38). கொத்தனாரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதற்கிடையே விஜயகுமார் கடன் வாங்கி வீடு கட்டினாராம். இதனால் கடந்த சில நாட்களாக கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும், திருமணமாகாத ஏக்கத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





ஞாயிறு, 10 மே, 2020

வீடுகளில் கருப்பு கொடி கட்டி துக்கம் அனுசரிப்பு

ரெயிலில் அடிபட்டு தொழிலாளர்கள் பலி:

வீடுகளில் கருப்பு கொடி கட்டி துக்கம் அனுசரிப்பு



விசாகப்பட்டினத்தில் தனியார் தொழிற்சாலையில் விஷ வாயு கசிந்து 11 பேர் இறந்தனர். இதுபோல், அவுரங்கபாத்தில் ரெயிலில் அடிபட்டு 15 தொழிலாளர்கள் பலியாயினர். இந்த சம்பவங்களுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து, தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி துக்கம் அனுசரித்தனர். குமரி மாவட்ட லெனினிஸ்டு செயலாளர் அந்தோணிமுத்து ரீத்தாபுரத்தில் உள்ள தனது வீட்டில் கருப்பு கொடியேந்தி துக்கம் அனுசரித்தார்.


நாகர்கோவிலில் சுவரொட்டி ஒட்ட தடை



நாகர்கோவிலில் சுவரொட்டி ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் கூறுகையில், நாகர்கோவில் மாநகராட்சியில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கை கழுவுதல் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும் ஓவிய கலைஞர்களை வைத்து விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து உள்ளோம். இந்த ஓவியங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதாக புகார்கள் வந்தன. எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு சுவரொட்டி ஒட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஏனெனில் கொரோனா பாதிப்பு தற்போது முடியக் கூடியதாக இல்லை. எனவே மக்களின் விழிப்புணர்வு மிகவும் அவசியம். எனவே தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அதோடு மரத்தில் ஆணி அடிக்கவும் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவையெனில் விளம்பர நோட்டீஸ் அச்சடித்து வினியோகம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளி, 8 மே, 2020

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு


தக்கலை அருகே பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் பிளசட் சேம், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி எமி கிராம்டா. இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு உடையார்விளையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

பின்னர், நேற்று முன்தினம் தனது வீட்டுக்கு திரும்ப வந்த போது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 1 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.

வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

வியாழன், 7 மே, 2020

முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு சார்பில்1,000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்


குமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் மாவட்டம் முழுவதும் உள்ள ஏழைகளுக்கு நோன்பை முன்னிட்டு முதல் கட்டமாக 1,000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது. அதற்கான பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தலைவர் இப்ராகீம்கான், பொதுச்செயலாளர் பி.ஹிமாம் பாதுஷா, பொருளாளர் நசீர் உசைன், துணை செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான எஸ்.ஆர்.ஹாஜிபாபு, இளைஞர் அணி தலைவர் அயூப்கான், நாகர்கோவில் மாநகர நிர்வாகிகள் ஜாகிர், சேக் முகமது, பசுலுல் கரீம், நவாஸ், சலீம், சேக் உள்பட அனைத்து கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் தம்பதி மீது தாக்குதல்



ஆரல்வாய்மொழி அருகே திருவள்ளுவர்நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 35), டெம்போ டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதை அறிந்த பெண்ணின் கணவர் கார்த்திக்கை கண்டித்தார். இதனால், அவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. பக்கத்து வீட்டில் உள்ள கண்ணன் அவரது மனைவி ராதிகா ஆகியோர் மோதலை விலக்கி விட சென்றனர்.
அப்போது, கார்த்திக்கும் அவரது கள்ளக்காதலியும் சேர்ந்து ‘ இந்த பிரச்சினைக்கு முழு காரணமும் நீங்கள்தான்’ எனக்கூறி கண்ணனையும் அவரது மனைவியையும் தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் கார்த்திக் மற்றும் கள்ளக்காதலி மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதன், 6 மே, 2020

சென்னையில் இருந்து வந்தவர்களின் வீட்டில் தனிமைப்படுத்தல் நோட்டீஸ்

சென்னையில் இருந்து குமரிக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவ்வாறு வரும் நபர்களை தனிமைப்படுத்த சுகாதாரத்துறையினர், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சளி, ரத்தம் மாதிரி எடுத்த பிறகு வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டதும், சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு சென்று தனிமைப்படுத்தல் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஈசாந்திமங்கலத்தில் ஒரு வீடு, பூதப்பாண்டியில் 2 வீடு, திட்டுவிளையில் 2 வீடுகளில் தனிமைப்படுத்துதல் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதாவது, அங்கு 8 பேர் சென்னையில் இருந்து வந்துள்ளனர்.

கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது




கருங்கல் அருகே நேராகாட்டுவிளையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கருங்கல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் சென்று சோதனை செய்த போது பிரபின் ஆன்டனி என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தெரிய வந்தது. இதையடுத்து பிரபின் ஆன்டனியை போலீசார் கைது செய்து 400 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர்.

திங்கள், 4 மே, 2020

ஓய்வு பெற்ற காவலர்கள் சங்கம் சார்பில் முக கவசம் வினியோகம்

ஓய்வு பெற்ற காவலர்கள் சங்கம் 

குமரி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர்கள் நலச்சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு முக கவசம் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சங்க ஒருங்கிணைப்பாளர் ஜோசப் ராஜமணி தலைமை தாங்க, செயற்குழு உறுப்பினர்கள் சதாசிவம், கிரீசன் ஆகியோர் முன்னிலையில் 250 முக கவசங்கள் கொல்லங்கோடு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாளிடம் வழங்கப்பட்டது. போலீசார், அந்த முக கவசத்தை பொதுமக்களுக்கு வழங்கினர்.



ஞாயிறு, 3 மே, 2020

கள்ளச்சாராயம் விற்றவர் கைது





மார்த்தாண்டத்தில் உள்ள மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜரெத்தினம் மற்றும் போலீசார் குமாரகோவில் அருகே உள்ள வேளிமலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஆனைக்கல் ஓடையில் நாகக்கோடு காட்டு குளத்தை சேர்ந்த செல்வகுமார் (வயது 53) என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டு இருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் செல்வகுமார் கள்ளச்சாராயத்தை நீண்ட காலமாக காய்ச்சி விற்றது தெரிய வந்தது. அவர் விற்பனைக்காக வைத்திருந்த 2 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கள்ளச்சாராய ஊறலையும் அவர்கள் கைப்பற்றி அழித்தனர்.


சனி, 2 மே, 2020

நாகர்கோவிலில் முக கவசம் ரூ.24 ஆயிரம் அபராதம் மூலம் வசூல்

நாகர்கோவிலில்

முக கவசம் அணியாமல் வெளியே வந்தவர்களிடம் ரூ.24 ஆயிரம் அபராதம் மூலம் வசூலாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 



நாகர்கோவிலில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவில் பகுதியில் முக கவசம் அணியாமல் வெளியே வந்த பொதுமக்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகிறார்கள். அந்த வகையில் முக கவசம் அணியாமல் வெளியே வந்தவர்களிடம் ரூ.24 ஆயிரம் அபராதம் மூலம் வசூலாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



வெள்ளி, 1 மே, 2020

ஊரடங்கு உத்தரவை மீறியதாககுமரியில் 37 நாட்களில் 6,708 வழக்குகள் பதிவு5,282 வாகனங்கள் பறிமுதல்





கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொது மக்கள் தேவையின்றி வாகனங்களில் சென்று வருகின்றனர். அத்தகைய நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர். மேலும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படுகிறது.
அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று 75 வழக்குகள் பதிவு செய்து, 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் நேற்று வரை 37 நாட்களில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 6 ஆயிரத்து 708 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 ஆயிரத்து 282 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

வியாழன், 30 ஏப்ரல், 2020

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது கலெக்டர் தகவல்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது

கலெக்டர் தகவல்


குமரியில் 5 ஆயிரத்து 962 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவி தொகையாக மாதம் ரூ.1,500 வீதம் ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களுக்கு மொத்தம் ரூ.1 கோடியே 78 லட்சத்து 86 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு அறையில் செயல்படும் இலவச தொலைபேசி அழைப்பு மூலம் உதவி கோரி 476 மாற்றுத்திறனாளிகளுக்கு அந்தந்த பகுதி தாசில்தார் மூலம் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் 178 தவழும் மாற்றுத் திறனாளிகளுக்கு காலுறை, கையுறை, கிருமி நாசினிகள் மற்றும் டிஷ்யூ பேப்பர் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

புதன், 29 ஏப்ரல், 2020

மண்டைக்காடு மக்களுக்கு குளச்சல் ஏ . எஸ் . பி அலுவலக ஊழியர்கள் நிவாரண உதவி

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது . இதனால் ஏழைகள் , ஆதரவற்றவர்கள் , குடிசை வாசிகள் உணவு பொருள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர் . தன்னார்வலர்கள் ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்து வந்தாலும் சில இடங்களில் குடிசை வாசிகளுக்கு | நிவாரண உதவிகள் கிடைக்காமல் உள்ளது . இதனையறிந்த குளச்சல் ஏ . எஸ் . பி . விஸ்வேஸ் பி . சாஸ் திரி , அவரது அலுவலக ஊழியர்கள் , அவரது துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் , ஓட்டுனர் மற்றும் அதிரடிப்படை வீரர்கள் ஆகி யோர் தங்கள் சொந்த செலவில் கொரோனா நிவாரணம் அளிக்க முன்வந்தனர் . இதையடுத்து மண்டைக்காடு அருகே பரவன் காலனி பொதுமக்களுக்கு அரிசி , காய்கறிகள் உள்பட சமையல் பொருட்கள் வழங்கப்பட்டது . ஏ . எஸ் . பி . விஸ்வேஸ் பி . சாஸ்திரி நேரில் சென்று மக்களுக்கு வழங்கினார் . அப் போது சிறுவர் , சிறுமிகளுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது . இதில் குளச்சல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் , சப் - இன்ஸ்பெக்டர்கள் இளங்கோ , சுரேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் .

மீன்பிடி தடை காலத்தை ரத்து செய்ய வேண்டும்மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை கோரிக்கை





மத்திய- மாநில அரசுகளுக்கு சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டணி அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உள்ளது. இதனால் ஆழ்கடல் மீனவர்களும் வீட்டில் முடங்கி உள்ளனர். ஜூன் 1-ந் தேதி முதல் 60 நாட்கள் இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் அமலுக்கு வருவதால் மீனவர்கள் மிகவும் சோர்ந்து போய் உள்ளனர். ஏனெனில் அவர்கள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஆழ்கடலுக்கு செல்ல முடியாததால் ஏற்பட்டுள்ள வாழ்வாதார இழப்பை ஈடுசெய்ய, இந்த வருடத்தின் மீன்பிடி தடை காலத்தை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


செவ்வாய், 28 ஏப்ரல், 2020

குழித்துறை அரசு ஆஸ்பத்திரிசிறப்பு பிரசவ வார்டுக்கு விஜயதரணி எம்.எல்.ஏ. நிதி உதவி





விஜயதரணி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு செயல்படுகிறது. குமரி மேற்கு மாவட்ட கடலோரம் மற்றும் மலையோர பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. எனவே மார்த்தாண்டம், விளவங்கோடு, கிள்ளியூர் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் 65 படுக்கைகளுடன் சிறப்பு பிரசவ வார்டு அமைக்கப்படுகிறது. இதற்கு உள்கட்டமைப்பு வசதி மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்க தேவையான அனைத்து நிதியையும் எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கி உள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இறந்தகுமரி கொத்தனாரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க குடும்பத்தினர் வலியுறுத்தல்





குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் அஜில்குமார் (வயது 47). இவருடைய மனைவி விஜயா (45). இவர்களுக்கு அஜீஷா (21) என்ற மகளும், அருண் (20) என்ற மகனும் உள்ளனர். அஜில்குமார் கடந்த 20 வருடங்களாக வெளிநாட்டில் கொத்தனாராக பணிபுரிந்து வந்தார். தற்போது அவர் சவுதி அரேபியாவில் இருந்தார். இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், அங்கு தங்கியிருந்த அறையில் முடங்கினார். அப்போது, திடீரென அவர் மாரடைப்பால் இறந்து விட்டார்.

பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து ஆஸ்பத்திரியிலேயே அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த அவருடைய குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். அதே சமயத்தில், அவருடைய உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர முடியாத நிலை உள்ளதால், 13 நாட்களாக கொத்தனார் உடல் அங்கேயே உள்ளது. இது சம்பந்தமாக மத்திய, மாநில அரசுகள் உதவி செய்து அஜில்குமார் உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

திங்கள், 27 ஏப்ரல், 2020

மோட்டார் சைக்கிளில் மது கடத்திய 2 பேர் கைது



பூதப்பாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வன் மற்றும் போலீசார் நேற்று இறச்சகுளம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களை தடுத்து சோதனை செய்த போது, பாட்டிலில் மதுபானம் கடத்தியது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்திய போது, நாகர்கோவில் சிதம்பரநகர் புதுத்தெருவை சேர்ந்த சிவதாஸ் (வயது 21), கணேசபுரம் பகுதியை சேர்ந்த விஷ்ணுபிரசாத் (24) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மது பாட்டிலை பறிமுதல் செய்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


வெள்ளி, 24 ஏப்ரல், 2020

குளச்சல் போலீசாருக்கு தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை

குளச்சல்

போலீசாருக்கு தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை



கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் போலீசார் முழுழூச்சுடன் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் போலீசாருக்கு தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து குளச்சலில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் டாக்டர் பெமிலா, செவிலியர் வசந்தா ஆகியோர் போலீசாருக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்தனர். இதில் அவர்களுக்கு இயல்பான உடல் வெப்ப நிலை இருந்தது. மேலும் சளி, இருமல் எதுவும் இல்லை. இதையடுத்து போலீசார் தங்கள் அன்றாட பணிகளை தொடர்ந்தனர்.

சனி, 18 ஏப்ரல், 2020

ஊரடங்கின் போதுகள்ளச்சாராயம் விற்றதாக 56 பேர் கைது





மனித உயிர்கொல்லி நோயாக விளங்கும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு வருகிற 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

இதனால் கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து கடற்கரை மற்றும் மலையோர கிராமங்கள், மாவட்டத்தின் பல்வேறு முக்கிய பகுதிகளிலும் ஹெலி கேமரா மூலம் போலீசார் கண்காணித்தனர். அப்போது ஏராளமான இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்தது தெரியவந்தது. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் ஊரடங்கின் போது 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளி, 17 ஏப்ரல், 2020

முகநூலில் அவதூறு கருத்து பதிவிட்டவர் மீது வழக்கு





தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பற்றி முகநூலில் அவதூறாக கருத்து பதிவிடப்பட்டிருந்தது. இந்த அவதூறை, புதுக்கடை கோவில் தெருவை சேர்ந்த சிவக்குமார் (வயது 39) என்பவர் பரப்பியது தெரியவந்தது. 

இது தொடர்பாக தி.மு.க. நிர்வாகி மோகன் (58) புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

வியாழன், 16 ஏப்ரல், 2020

குளச்சலில் உணவு கிடைக்காமல் அலையும் குரங்கு வீட்டுக்குள் புகுந்து பழங்களை தின்றது

குளச்சல் பகுதியில் கடந்த சில நாட்களாக பெரிய குரங்கு ஒன்று அலைந்து திரிந்து வருகிறது . பகல்வேளையில் சிறுபெட்டிகடை , பழக்கடைகளில் புகுந்து பசி தீர்க்கும் அந்த குரங்கு இரவு அண்ணாசிலை சந்திப்பில் உள்ள ஆலமரத்தில் தங்கும் . 
தற்போது அமலில் உள்ள ஊரடங்கால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது . இதனால் இந்த குரங்கு உணவுகிடைக்காமல் குளச்சல் பகுதியில் அலைந்து திரிந்து வருகிறது . நேற்று மதியம் காமராஜர் சாலையில் இந்த குரங்கு புகுந்தது . 

பின்னர் அங்குள்ள வீடுகள் மரங்களில் தாவி தாவி உணவு ஏதாவது கிடைக்குமா ? என அங்குமிங்கும் திரிந்தது . ஒரு சிறுமி ஆர்வ மிகுதியில் வீட்டிலிருந்து வாழைப்பழம் எடுத்து வந்து குரங்கு முன் வைத்தார் . அதை சாப்பிட்டு முடித்த குரங்கு அதே வீட்டுக்குள் புகுந்து அங்கு மீதியிருந்த வாழைப்பழங்கள் ,டிபனை  எடுத்து வெளியே கொண்டு வந்து சாப்பிட்டு  விட்டு சென்றது. இந்த காட்சிகளை சிறுவர் முதல் பெரியவர்வரை கண்டு மகிழ்ச்சி அடைந்தாலும் வீட்டுக்குள் குரங்கு புகுந்ததால் மீண்டும் மீண்டும் குரங்கு வருமா ? என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர் . எனவே உணவின்றி தவிக்கும் இந்த குரங்கை வனத்துறையி னர் பிடித்து வனப்பகுதியில் கொண்டு போய் விட வேண்டும் என பொதுமக்கள் வலிவுறுத்தி உள்ளனர் .

ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

குளத்தில் குளிக்க சென்றவர் தவறி விழுந்து சாவு





சாமிதோப்பு அருகே உள்ள செட்டி விளையில் பூலாங்குளம் உள்ளது. அந்த வழியாக நேற்று காலை சென்றவர்கள், குளத்தில் ஆண் பிணம் மிதப்பதை பார்த்து, தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், தென்தாமரைகுளம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு குளத்தில் மிதந்த பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் இறந்தவர் நாகர்கோவில் அருகில் உள்ள கோட்டார் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (வயது 45) என்பது தெரிய வந்தது. சாமிதோப்பு பதிக்கு வந்த அவர் குளத்தில் குளிக்க சென்ற போது, தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதுகுறித்து தென்தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளி, 10 ஏப்ரல், 2020

நாகர்கோவிலில் மேலும் 11 கைதிகள் விடுவிப்பு

நாகர்கோவிலில் மேலும் 11 கைதிகள் விடுவிப்பு



கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கவும், சிறைகளில் இட நெருக்கடி ஏற்படாமல் இருக்கவும் சின்ன ,சின்ன வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைகளில் இருக்கும் கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். இதேபோல் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையிலும் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 62 பேர் விடுதலை செய்யப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் 5 பேரும், நேற்று 6 பேருமாக 11 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.......

வியாழன், 9 ஏப்ரல், 2020

குளத்தில் மீன்பிடித்த 4 பேர் மீது வழக்கு

ஊரடங்கை மீறி

குளத்தில் மீன்பிடித்த 4 பேர் மீது வழக்கு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகள் மட்டும் வாங்க பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள்.

இந்நிலையில்  தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் மருதவிளை கொற்றிகுளம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள குளத்தில் அழகியமண்டபம் பனங்காலவிளை பகுதியை சேர்ந்த ராஜன்(வயது 39), அருள்(39), ஸ்டான்லி(32), சதீஷ்(29) ஆகிய 4 பேர் மீன் பிடித்து கொண்டிருந்தனர். இவர்கள் மீது ஊரடங்கு உத்தரவை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

போதகர்கள் 2 பேர் மீது வழக்கு ஊர்மக்களை அழைத்து ஆராதனை

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊர் டங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . வெளியில் சுற்றிதி ரிபவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள் . வாக னங்களும் பறிமுதல் செய்யப்படுகிறது . கோவில்கள் ,ஆலயங்கள் , மசூதிகள் மூடப்பட்டுள்ளன . 

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் கொல்லங் கோடு அருகே உள்ள ஒரு மீனவ கிராமத்தில் போதகர்கள் 2 பேர் ஊர் மக்களை திரட்டி ஆலயத்தில் ஆராதனை நடத்தினர் . இதுபற்றி தகவல் அறிந்த கொல்லங்கோடு போலீசார் விரைந்து சென்று தடை உத்தரவை மீறி ஆலயத்தில் கூடி இருந்தவர்களை விரட்டி விட்டனர் . பின்னர் தடை உத்தரவை மீறி செயல்பட்டதாக போதகர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர் . 

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...